கடலுக்கு அடியில் சென்று காதலை சொன்ன இளைஞர் பலி

கடலுக்கு அடியில் இருந்து காதலை சொன்ன நபர், நீரில் மூழ்கி பலியான சம்பவம் அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த பேடன் ரூஜ் என்பவர் தன்னுடைய காதலியுடன், தான்சானியா நாட்டின் பெம்பா தீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடலுக்கு அடியில் 32 அடி ஆழத்தில் உள்ள மாண்டா விடுதியில் இருவரும் தங்கியிருந்தனர். தன் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை சொல்ல நினைத்த பேடன் ரூஜ், கடலுக்கு அடியில் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு எழுதிய கடித்தத்தை காதலியிடம் காண்பித்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் அவர், எடுத்து செல்லாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Exit mobile version