ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

தமிழக ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தததையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 21ம் தேதி, தமிழக ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்கு சரவணபிரசாத் என்பவரின் பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அதில் ஆளுநரை சுட்டுவிடுவதாகவும், ராஜ்பவனை குண்டு வைத்து தகர்த்து விடுவதாகவும் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இக்கடிதம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

Exit mobile version