பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையர்கள் கைவரிசை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டி அருகே பாலாஜி நகரில் வசித்து வரும் மாரிக்கனி என்பவர் தனது தந்தைக்கு உணவு கொடுக்க வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 70 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய மாரிக்கனி நகைகள் கொள்ளைபோனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் புகார் அளித்ததையடுத்து ஆண்டிப்பட்டி காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் வீட்டுக்கு வந்து தடயங்களைச் சேகரித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version