16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது

16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக மணிமாறன் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை பல்லாவரம் சஞ்சய் காந்தி நகரை சேர்ந்த மணிமாறன் என்பவர் தனது மனைவி, 2 வயது குழந்தை மற்றும் மனைவியின் தங்கையுடன் வசித்து வருகிறார். மனைவியின் 16 வயது சகோதரியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று அவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் சுப்புலட்சுமி அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் மணிமாறனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version