ரியல் எஸ்டேட் தொழில் அதிபபரை 10 பேர் கொண்ட மர்மக் கும்பலால் வெட்டி படுகொலை

தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரை 10 கொண்ட மர்மக் கும்பல் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 2005ஆம் ஆண்டு முன்பகை காரணமாகக் கோரம்பள்ளத்தில் பச்சைப்பெருமாள் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், சிவக்குமார் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், விசாரணைக்கு, சிவக்குமார் ஆஜராக நீதிமன்றத்திற்கு நேரில் வந்துள்ளார். அப்போது காரை நிறுத்தி விட்டு நடந்து செல்லும் போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், கத்தி மற்றும் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Exit mobile version