News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கங்கையில் ஒதுங்கிய சடலங்கள்- உ.பி. அரசு மீது பீகார் அமைச்சர் குற்றச்சாட்டு

Web Team by Web Team
May 12, 2021
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கங்கையில் ஒதுங்கிய சடலங்கள்- உ.பி. அரசு மீது பீகார் அமைச்சர் குற்றச்சாட்டு
Share on FacebookShare on Twitter

பீகாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில், கங்கை நதியிலிருந்து, மீட்கப்பட்ட 71 உடல்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது. பொறுப்பற்ற முறையில் உடல்களை வீசி இறந்தவர்களையும், கங்கை நதியையும் கலங்கப்படுத்த வேண்டாம் என பீகார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது

சவுஸா நகரின் கங்கை நதியில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் மிதப்பதைக் கண்ட உள்ளூர் மக்கள், நகராட்சிக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அழுகிய நிலையிலும் பாதி எரிந்த நிலையிலும் மீட்கப்பட்ட உடல்களை, நகராட்சி பணியாளர்களே அடக்கம் செய்தனர். கொரோனா சமயத்தில் இதுபோன்று உடல்கள் மீட்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

உடல்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுக்கு பிறகே உண்மை நிலை தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சவுஸா நகரில், விறகுகள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களே உடல்களை கங்கை நதியில் வீசியுள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதனை மாவட்ட ஆட்சியர் அமர் சமீர் மறுத்துள்ளார்

இதுபோன்று உடல்கள் மீட்கப்படுவது முதல்முறையல்ல என்றும், அடிக்கடி இவ்வாறு சிதைந்த உடல்கள் கங்கை நதியில் மிதப்பதைக் கண்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இந்த உடல்கள் உத்தரபிரதேச மாநிலம் வாராணசி மற்றும் அலகாபாத் பகுதிகளில் இருந்து கங்கை நதியில் வீசப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகளிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. கங்கை நதியில் உடல்களை வீசி இறந்தவர்களையும், கங்கை நதியையும், உத்தரப்பிரதேச அரசு அவமதித்து விட்டதாக பீகாரின் மாநில அமைச்சர் சஞ்சய் குமார் ஜா தெரிவித்துள்ளார். இனியாவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: biharcorpseonrivergangarivernewsjuttarpradesh
Previous Post

தமிழ்நாட்டில் உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா!

Next Post

ராஜிவ் கொலை வழக்கு: சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
ராஜிவ் கொலை வழக்கு: சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்

ராஜிவ் கொலை வழக்கு: சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் காலமானார்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version