News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தங்களை காவல்துறையினர் என்று கூறி கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்

Web Team by Web Team
December 29, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தங்களை காவல்துறையினர் என்று கூறி கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் மாவட்டத்தில், வெள்ளி பொருட்கள் செய்யும் நபரிடம் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் தேரடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 34,வயதான இவர்  வெள்ளி பொருட்கள் செய்யும் தொழில் செய்து
வருகிறார். இந்த நிலையில் பெரம்பூரில் உள்ள ஒரு கடையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வெள்ளி கட்டிகளை வாங்கிக்கொண்டு மின்சார ரயிலில், பட்டாபிராம், இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு வந்து இறங்கினார்.
அங்கிருந்து பட்டாபிராம், பாரதியார் நகரில் உள்ள மாமனார் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது. மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்து தங்களைப் காவலர்கள் எனக்கூறி கொண்டு கார்த்திக் வைத்திருந்த உடமைகளை சோதனையிட்டனர்.
அப்போது கார்த்திக் காவல் உதவி மையம், அருகில் தான் உள்ளது அங்கு வைத்து என்னிடம்  விசாரணை நடத்துங்கள் என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த சமயத்தில்  திடீரென  துப்பாக்கியை காட்டி மிரட்டி, கார்த்திக்கிடம் இருந்த வெள்ளி கட்டிகளை  மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் எப்படியோ சுதாரித்துக்கொண்ட  கார்த்திக், திருடன் திருடன் என சத்தம் போட்டார். இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளையர்களை மடக்கினர் அதில் ஒருவன் மட்டும் வசமாக மாட்டிக்கொண்டான். மற்றொருவன் அங்கிருந்து தப்பியோடினான். அவனுக்கு  தர்மஅடி கொடுத்து பட்டாபிராம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட கொள்ளையனிடம் நடத்தப்பட்ட  விசாரணையில், அவன்  திருச்சியை சேர்ந்த சுரேஷ், 32 என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய செங்குன்றத்தை சேர்ந்த அவரது நண்பரான பாட்ஷா என்பவனை காவல்துறையின்  தேடி வருகின்றனர். விலையுயர்ந்த பொருட்களையோ அல்லது பணத்தையோ கொண்டு செல்லும் போது தெரியாத நபர்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

Tags: policerobberyThiruvallur
Previous Post

சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப்போட்டிக்கு மேரி கோம் தகுதி

Next Post

ஒகேனக்கலுக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,300 கன அடியாக குறைவு

Related Posts

சூறைக்காற்று அடித்ததால் பறந்த பேருந்தின் மேற்கூரை! திருவள்ளூரில் பரபரப்பு!
தமிழ்நாடு

சூறைக்காற்று அடித்ததால் பறந்த பேருந்தின் மேற்கூரை! திருவள்ளூரில் பரபரப்பு!

May 30, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?
அரசியல்

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
திருவள்ளூர்..தேர்வு எழுத வந்த மாணவிகளை குரங்குகள் துரத்துவதால் அவதி..!
தமிழ்நாடு

திருவள்ளூர்..தேர்வு எழுத வந்த மாணவிகளை குரங்குகள் துரத்துவதால் அவதி..!

March 14, 2023
வாகனத்திற்கு ஆவணங்கள் இருக்கா? கேட்ட SI முகத்தில் குத்து விட்ட வக்கீல் அரெஸ்ட்
தமிழ்நாடு

வாகனத்திற்கு ஆவணங்கள் இருக்கா? கேட்ட SI முகத்தில் குத்து விட்ட வக்கீல் அரெஸ்ட்

March 4, 2023
உஷார்.! நம்பர் பிளேட் இனி இப்படித்தான் இருக்கணும்.. மிஸ்ஸானால் தேடி வரும் அபராதம்.!
தமிழ்நாடு

உஷார்.! நம்பர் பிளேட் இனி இப்படித்தான் இருக்கணும்.. மிஸ்ஸானால் தேடி வரும் அபராதம்.!

February 26, 2023
டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !
தமிழ்நாடு

டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !

February 14, 2023
Next Post
ஒகேனக்கலுக்கு நீர் வரத்து  வினாடிக்கு 2,300 கன அடியாக குறைவு

ஒகேனக்கலுக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,300 கன அடியாக குறைவு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version