ஸ்ரீரங்கம் பகுதியில் 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

சிசிடிவி கேமரா பொருத்தம் காரணமாக 50 சதவீத குற்றங்கள் தடுக்கப்பட்டதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியிலுள்ள முக்கிய இடங்களில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 90 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து கேமராக்களும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு எதிரே அமைந்துள்ள காவல் கண்காணிப்பு அறை மூலம் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது. இந்த காவல் கண்காணிப்பு அறையை சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், காவல்துறையினர் சிறப்பாக செயல்பட பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Exit mobile version