9 முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல்துறை பார்வையாளர்

அரியலூர் அருகே மதுபோதையில் 9 முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட, காவல்துறை பார்வையாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கான காவல்துறை பார்வையாளராக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் கல்சன் எனும் ஐபிஎஸ் அதிகாரி வந்தார். அரியலூர் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்த அவர், பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கி 9 முறை வானை நோக்கி சுட்டு உள்ளார். அப்போது அந்த அதிகாரி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து ஹேமந்த் கல்சன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Exit mobile version