திருப்பதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரிடமிருந்து 9 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு

திருப்பதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரிடமிருந்து 9 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க ஆந்திர காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ராமானுஜ ஜங்சன் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த பசவராஜ் என்பவர் திருப்பதி மற்றும் சித்தூர் ஆகிய இடங்களிலுள்ள நகை கடைகள் மற்றும் வீடுகளில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. திருடிய நகைகளை சென்னையில் பதுக்கி வைத்து, தற்போது திருப்பதிக்கு விற்பனை செய்ய வந்த நிலையில், காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, 249 கிராம் எடை தங்கமும், 3.5 கிலோ கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 9 லட்சத்து 12 ஆயிரத்து 675 ரூபாய் ஆகும்.

Exit mobile version