12ஆம் பொதுத்தேர்வு முகப்பு விடைத்தாள் அச்சிடும் பணி துவக்கம்

2019 ஆம் ஆண்டு, மார்ச் ஒன்றாம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதை அடுத்து, விடைத்தாள் முகப்பு அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 8 லட்சத்து 60 ஆயிரத்து 984 மாணவ மாணவியர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ளனர். இந்தநிலையில், மாணவர்களின் விவரங்கள் அடங்கிய முகப்பு தாள்கள் அச்சடிக்கும் பணி தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பாட வாரியான தேர்வுக்காக 57 லட்சம் முகப்பு விடைத்தாள்கள் அச்சிடும் பணியும் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்தே செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளதால், இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Exit mobile version