கன்னியாகுமரியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 8,552 ஊழியர்கள்- ஆட்சியர்

கன்னியாகுமரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 8 ஆயிரத்து 552 ஊழியர்கள் தேர்தல்  பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பதற்றம் மிகுந்த வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட 208 வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ,மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே கூறியுள்ளார். மேலும், தேர்தல் தொடர்பாக புகார் அளிப்பதற்கு 1950 என்ற எண்ணை பயன்படுத்தலாம் என்றும் தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ள சிவிஜில் செயலி மூலமும் புகார் அளிக்கலாம் எனவும் அப்போது அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version