காவல் படை பயிற்சியை நிறைவு செய்த 850 காவலர்கள்

சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் 850 காவலர்கள் பயிற்சியை நிறைவு செய்தனர்.

சென்னை ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் பயிற்சியை நிறைவு செய்த 850 காவலர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஐ.ஜி சதீஷ் சந்திர வர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 24 வார கடின பயிற்சியில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, அறிவு சார் பயிற்சி அளிக்கப்பட்டது. சிறப்பாக தேர்ச்சிப் பெற்ற 3 காவலர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.

Exit mobile version