இந்தியாவில் கொரோனா வைரசால் 24 மணி நேரத்தில் 826 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரசால் 24 மணி நேரத்தில் 826 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 420 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த சூழலில், 286 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மூவாயிரத்து 202 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பட்டியலில், 2வது இடத்தில் இருக்கும் டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், புதிதாக 25 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 267ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் ஆயிரத்து 131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று 142 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் 929 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 759ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 515 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version