தமிழகத்தில் புதிதாக 817 பேருக்கு கொரோனா பாதிப்பு!!!

தமிழகத்தில் புதிதாக 817 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதிதாக 817 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 678 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்ட்ராவிலிருந்து தமிழகம் திரும்பிய 138 பேருக்கும், கேரளாவிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 508 பேர் ஆண்கள் மற்றும் 309 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் அதிகபட்சமாக 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 74 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 40 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். செங்கற்பட்டு மாவட்டத்தில் 31 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 567 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து909 ஆகவும், குணமடைந்தவர்களின் சதவீதம் 53 புள்ளி 43 ஆகவும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாள் 6 பேர் உயிரிழந்ததால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. 8 ஆயிரத்து 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version