இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து தாண்டியது!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 392 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது…

மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்து 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் 19 ஆயிரத்து 844 பேரும், குஜராத்தில் 16 ஆயிரத்து 779 பேரும், ராஜஸ்தானில் 8 ஆயிரத்து 831 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 8 ஆயிரத்து 89 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 7 ஆயிரத்து 823 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

Exit mobile version