பழனியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் 8 பேர் கைது

பழனி பேருந்து நிலையத்தில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு நாள் தோரும் ஆயிரக்கணக்கான வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும்போது திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தன. இதனால், பழனி பேருந்து நிலையத்தில் சிசிடிவி பொருத்தி, போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் அடிப்படையில் நடைபெற்ற கண்காணிப்பில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 8 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இதுபோன்ற குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version