மாஞ்சா நூலை வாங்கி பட்டம் விட்ட 8 பேர் கைது

சென்னை கொடுங்கையூரில் ஆன்லைன் மூலம் மாஞ்சா நூலை வாங்கி பட்டம் விட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொடுங்கையூர் பகுதியில் வீட்டின் மொட்டை மாடி ஒன்றில், மாஞ்சா நூலை பயன்படுத்தி சிலர் பட்டம் விடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், பட்டம் விட்டுக் கொண்டிருந்த 8 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 36 பட்டம், மாஞ்சா நூல் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக , 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்பனை செய்த நபரையும் தேடி வருகின்றனர்.

Exit mobile version