வரும் ஆண்டில் 8 நிமிடத்தில் விபத்து நடக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல நடவடிக்கை

சென்னையில் விபத்து நடந்த இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் 8 நிமிடத்தில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 108 அவசர கால சேவையின் அழைப்பாளர்கள் மற்றும் பயனாளிகளுக்கான பாராட்டு விழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் கணேஷ் தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், 108 ஆம்புலன்ஸ் சேவையும் பிறமாநிலங்களை விட தமிழகத்தில் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சென்னையில் நகர் பகுதிகளில் விபத்து நடக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் கடந்த ஆண்டு 11 நிமிடத்தில் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். வரும் ஆண்டில் 8 நிமிடத்தில் விபத்து நடக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.

Exit mobile version