துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழப்பு

துபாயில் நடந்த பேருந்து விபத்தில், 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து, துபாய் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில், 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பயணம் மேற்கொண்டிருந்தனர். துபாய் அருகே பேருந்து வந்தபோது, அங்கிருந்த அறிவிப்பு பலகைமீது திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பேருந்தில் பயணம் செய்த 8 இந்தியர்கள் உள்ளிட்ட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் பலியாகியுள்ளதை துபாயில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது. ராஜகோபாலன், பெரோஸ் கான் பதான், ரேஷ்மா பேரோஸ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்காவீட்டில், கிரண் ஜான்னி, வாசுதேவ், திலக்ராம் ஜவஹர் தாகூர் ஆகிய 8 இந்தியர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

Exit mobile version