திருப்போரூர் கந்தசாமி கோயிலின் மாசி மாத பிரம்மோற்சவத்தின் 7ம் நாள் விழா

திருப்போரூர் கந்தசாமி கோயிலில், மாசி மாத பிரமோற்சவ 7ம் நாளையொட்டி நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுயம்பு மூர்த்தியாக காட்சி தரும் கந்தபெருமானுக்கு சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க திருத்தேர் பவனி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, அரோகரா முழக்கத்துடன், திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் கிழக்கு மாடவீதி, மேற்கு வீதி வழியாக வந்து வந்து கந்தபெருமான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது.

Exit mobile version