தன்னலம் கருதா தியாக உள்ளங்கள்-2-ம் அலையில் உயிர்நீத்த மருத்துவர்கள் எண்ணிக்கை தெரியுமா??

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

8 மாதங்கள் நீடித்த கொரோனா முதல் அலையில் 748 பேர் இறந்த நிலையில், 2-ம் அலையில் 798 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் அலையில், அதிகபட்சமாக டெல்லியில் 128 மருத்துவர்களும், பீகாரில் 115 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் 79 மருத்துவர்களும், மேற்கு வங்கத்தில் 62 மருத்துவர்கள் இறந்துள்ளனர். தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் 51 மருத்துவர்கள் கொரோனா 2-ம் அலைக்கு பலியாகி உள்ளனர். ஆந்திராவில் 40 மருத்துவர்களும், தெலங்கானாவில் 37 மருத்துவர்களும் கொரோனா 2-ம் அலைக்கு உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் ஜெ சார்பாக தன்னலம் கருதா அந்த தியாக உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி……..

Exit mobile version