தமிழகத்தில் 7,728 பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை பொருத்த அரசாணை

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்துவற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என, கடந்த மே மாதம் 30-ம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதன்படி 3 ஆயிரத்து 688 உயர் நிலைப்பள்ளிகள், 4 ஆயிரத்து 40 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 728 பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக 15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு கால தாமதமாக வருவதை தடுக்க முடியும் என பள்ளிக் கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Exit mobile version