73-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

டெல்லி செங்கோட்டையில் வரும் 15 ஆம் தேதி, 73-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

73-வது சுதந்திர தின விழாவில், செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, கொடி ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். பிரதமர் பங்கேற்க உள்ளதால், அவருடைய இல்லத்திலிருந்து செங்கோட்டை வரையிலான சாலைகளிலும், செங்கோட்டை சுற்றியுள்ள சாலைகளிலிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க, டெல்லி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியை பொருத்தவரை, காவல்துறையுடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.v

Exit mobile version