தூத்துக்குடியில் 732 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்

தூத்துக்குடியில் 732 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு 732 பயனாளிகளுக்கு 2 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version