கோவை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ7,21,000 பறிமுதல்

கோவை அருகே தேர்தல் பறக்கும்படையினரால் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட 7 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காந்திபுரம் ஜி.பி சிக்னல் பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அப்போது மனோ என்பவர் உரிய ஆவணமின்றி 7 லட்சத்து 21 ஆயிரத்தினை எடுத்து வந்துள்ளார்.

இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிய ஆவணம் அளித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள மனோவிற்கு அறிவுரை வழங்கியுள்ளனர். பறிமுதல் செய்த பணம் தற்போது அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version