கொரோனாவுக்கு இதுவரை 7,162 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி!

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், காணொலி மூலம் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். வீடுவீடாக சென்று காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்படுவதாகவும், கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்ற பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். தமிழகத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 7 ஆயிரத்து 162 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

Exit mobile version