காவிரி ஆற்றில் நீர்வரத்து 700கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரானது தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக அணைகளில் இருந்து நேற்று காலை தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட உபரிநீர் ஆனது 3ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நிலையில், மாலைக்குள் 7 ஆயிரத்து 500 கனஅடியாக நீரின் அளவு அதிகரித்தது.

இதையடுத்து தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 400 கன அடியாக இருந்த நீர்வரத்து 700 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version