சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி சடலமாக மீட்பு!

சாத்தான்குளம் அருகே கல்விளை என்ற இடத்தில் 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கல்விளை பகுதியை சேர்ந்த உச்சி மாகாளி என்பவரின் மகள், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் சிறுமியை தேடும் பணி நடைபெற்றது. அப்போது உச்சி மாகாளியின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் சிறுமி சடலமாக கிடந்தது தெரிய வந்தது. இதனிடையே, சிறுமி மரணம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் மாணிக்கபுரத்தை சேர்ந்த முக்தீஸ்வரன் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version