சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், டெல்லியின் பூங்கா ஒன்றில் உலகின் ஏழு அதிசயங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரையும் கவரும் வகையில் டெல்லியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டு, அங்கு உலகின் ஏழு அதிசயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தாஜ்மகால், ஈபில் டவர், சாய்ந்த கோபுரம், பிரமீடு உள்ளிட்டவற்றின் வடிவமைப்புகள் ஸ்கிராப் ஆட்டோமொபைல் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. டெல்லி மாநகராட்சி இதை உருவாக்கி உள்ளது. பழைய சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கான சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பல வண்ண விளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இவை காட்சிப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த வாரத்தில் இந்த பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.