புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 7 டன் நிவாரணப் பொருட்கள்

புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் சார்பில் 7 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன

கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகின. இந்நிலையில் தஞ்சாவூரில் இயங்கி வரும் மத்திய அரசின் இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் சார்பில், பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளுக்கு அரிசி, பிரட் மற்றும் பிஸ்கட் உட்பட 7 டன் அளவிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

 

Exit mobile version