பண இரட்டிப்பு மோசடி செய்த பெண் உட்பட 7 பேர் கைது

ஈரோட்டில் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டதாக ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 1 லட்சம் ருபாய் தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த மோசடியில் ஒரு பெண் உள்பட 7 பேர் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒரு பெண் உட்பட 7 பேரை கைது செய்தனர்.

Exit mobile version