சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 நக்சலைட்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 7 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் நக்ஸலைட்கள் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலமாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பல்வேறு குற்றசம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. மேலும், அரசுக்கு எதிராக செயல்படுதாகவும், பொதுமக்களை வன்முறையில் தூண்டிவிடுதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து நக்சலைட்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்ட்டார் மாவட்டத்தில் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை சிறப்பு படையினர் சுற்றி வளைத்த அதிரடிப்படையினர், நக்சலைட்டுகள் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு படை டி.ஐ.ஜி. சுந்தர் ராஜ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version