தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 7 பேர் புகார்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது, மேலும் 7 பேர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடகளப் பயிற்சியாளரும் மத்திய அரசு ஆயத்தீர்வைத் துறை துணை கண்காணிப்பாளருமான நாகராஜன் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது மேற்கொண்டு 7 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை பயிற்சியாளர் நாகராஜன் மீது 11 புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version