தொழிலதிபர் வீட்டில் பீரோவை உடைத்து 7 லட்சம் மதிப்பிலான நகை,பணம் கொள்ளை

கோவையில் தொழிலதிபர் வீட்டின் பீரோவை உடைத்து இரண்டு கோடியே ஏழு லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

கோவையை சேர்ந்த தொழிலதிபரான சைலேஷ் எத்திராஜ், தனது குடும்பத்தினருடன் பெங்களூரு சென்று இருந்தார். இன்று காலை வீடு திரும்பிய அவர், பீரோவின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீரோவில் இருந்து இரண்டு கோடி ரூபாயும், ஏழு லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எத்திராஜ் வீட்டில் வேலை செய்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் என்பவர் தலைமறைவாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரை காவல்துறையினர் வருகின்றனர்.

Exit mobile version