தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெங்களூருவை சேர்ந்த பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

 தும்கூரு மாவட்டத்தில் உள்ள சித்தாபுரா தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 வயது குழந்தை உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version