7 பேர் நீக்கம் : அதிமுக தலைமை நடவடிக்கை!

அதிமுக களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட 7 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் தட்சணாமூர்த்தி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இதே போல், சூளகிரி கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த சம்பங்கி, சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, பிரசாந்த்குமார், நாகராஜ், ஆனந்த் ஆகிய 6 பேரும் கட்சியின்அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்றும் அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

 

Exit mobile version