திருநெல்வேலியில் குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய 7 சிறுவர்கள் – தேடும் பணியில் போலீசார் தீவிரம்

திருநெல்வேலியில் குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய 7 சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி ரயில்நிலையம் அருகே உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்கள் தங்கி உள்ளனர். கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட 7 சிறுவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் காப்பகத்தில் உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்து கொண்டு சிறுவர்கள் 7 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காப்பக நிர்வாகிகள் போலீசிடம் புகார் அளித்தனர் . இதனைத் தொடர்ந்து தப்பியோடிய 7 சிறுவர்களை கண்டுபிடிப்பதற்கான பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

Exit mobile version