7.5% இட ஒதுக்கீடு – மாணவ, மாணவிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிதியுதவி

கள்ளக்குறிச்சியில் 7 புள்ளி 5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த 11 மாணவர்களுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிதியுதவி வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற, 11 மாணவ மாணவிகளுக்கு, தமிழக அரசு கொண்டுவந்துள்ள 7 புள்ளி 5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ், மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அந்த மாணவ, மாணவிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிதியுதவி வழங்கினார். ஒவ்வொரு மாணவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version