பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 2 நாள் நடைபெறும் சர்வதேச போக்குவரத்து மாநாட்டை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, சிறப்பான போக்குவரத்து, சிறப்பான வேலை வாய்ப்பையும், உள்கட்டமைப்பையும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்றார்.
இந்தியாவில் பொருளாதாரம், நகர வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்ட மோடி, 100 ஸ்மார்ட் நகரங்களை கட்டமைத்து வரும் மத்திய பாஜக அரசு, சாலைகள், விமானநிலையங்கள், ரயில் பாதைகள், துறைமுகங்கள் வேகமாக அமைத்து வருவதாகக் கூறியுள்ளார். இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியானது Common, Connected, Convenient, Congestion-free, Charged, Clean, Cutting-edge ஆகிய 7 சி-ஐ மையமாக கொண்டுள்ளதால் அவற்றில் கவனம் செலுத்தி வருவதாக மோடி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான பயணத்தை அனைத்து வகைகளிலும் உறுதி செய்வது அவசியம் என்ற அவர், மூத்த குடிமக்கள், மகளிர் மற்றும் மாற்று திறனாளிகளின் பாதுகாப்பு இன்றியமையாதது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.