59 மக்களவை தொகுதிகளில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

17-வது மக்களவைத் தேர்தலின் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 6 ஆம் கட்டமாக இன்று 7 மாநிலங்களில் தொடங்கி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், ஹரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள் மற்றும் டெல்லியில் 7 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version