புஷ்கர விழாவின் 6-ம் நாளான இன்று புனித நீராட பக்தர்கள் குவிந்தனர்!

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாபுஷ்கர விழா தாமிரபரணி ஆற்றங்கரையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் வரை 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு தாமிரபரணி தீர்த்தக் கட்டத்தில் புஷ்கர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version