ஸ்ரீரமண மகரிஷிரியின் 69-வது ஆராதனை விழா

எளிமைக்கு உதாரணமாக விளங்கியவர் ரமண மகரிஷி என்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியில், ஸ்ரீ ரமண பக்த சமாஜம் சார்பில் ரமண மகரிஷியின் 69-வது ஆராதனை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு ரமண மகரிஷி குறித்த புத்தகத்தை வெளியிட்டார். விழாவில் பேசிய ஆளுநர், மதுரையில் 1896-ல் பக்தராக தனது ஆன்மீக பணியை தொடங்கி, 54-வயதில் ஆன்மிக முக்தியடைந்தவர் ரமணமகிரிஷி என்றார். எளிமைக்கு உதாரணமாக விளங்கியவர் ரமண மகிரிஷி என்றும், அமைதியும், புரிதலும் தான் முக்தியடைய அவசியம் என்றும் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

Exit mobile version