ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 650 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில், திடீரென அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டது.

இதனால், ஒகேனக்கலில் நீர் வரத்து படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 600 கன அடியில் இருந்து 650 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து குறைந்தும் ஒகேனக்கல் மெயினருவி நடைபாதையில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தொடர்ந்து 193வது நாளாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version