தமிழகத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா தொற்று!!

தமிழகத்தில் மேலும் 6 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 85ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 495 பேரில் 3 ஆயிரத்து 824 பேர் ஆண்களும், 2 ஆயிரத்து 671 பேர் பெண்களும் ஆவர்.

தலைநகர் சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 436ஆக உயர்ந்துள்ளது.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 498 பேருக்கும், செங்கல்பட்டில் 419 பேருக்கும், கடலூரில் 383 பேருக்கும் நோய் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 329 பேருக்கும், திருவள்ளூரில் 293 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 6 ஆயிரத்து 406 பேர் குணமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 62 ஆயிரத்து 133ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம், 85 புள்ளி 79 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், 94 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 52 ஆயிரத்து 721 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version