ஆப்கானில் வெடிகுண்டு தாக்குதலில் 62 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் மசூதியில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில், 62 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள மசூதியில் தொழுகையின் போது தீடீரென அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த கோர வெடிகுண்டு தாக்குதலில், 62 பேர் பலியான நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Exit mobile version