சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாட்டு விமானங்களில் பயணித்தவர்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், 4 பேரின் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 62 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Exit mobile version