கரூரில் 61 ஆவது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி

கரூரில் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் நடைபெற்ற 61 ஆவது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டியில் இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்திய 61வது கூடைப்பந்தாட்ட போட்டி, கடந்த 21 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் லீக் சுற்றுகள் முடிந்து, இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்தியன் வங்கி சென்னை அணியும், பேங்க் ஆப் பரோடா அணியும் மோதின. இதில் சென்னை அணி 88 புள்ளிகளை பெற்றிருந்தது. பேங்க் ஆப் பரோடா 79 புள்ளிகளை பெற்று 9 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனையடுத்து வெற்றி பெற்ற சென்னை அணிக்கு அமைச்சர் எம்.ஆர் விஜபாஸ்கர் கோப்பை மற்றும் சான்றிதழை வழங்கினார்.

Exit mobile version