மீன்பிடித் தடைக்காலம் என்பதால் காரைக்காலில் படகுகள் மற்றும் மீன் வலைகளை சரிசெய்யும் பணி

மீன்பிடித் தடைக்காலம் நடைமுறைக்கு வந்துள்ளதால், காரைக்காலில் படகுகள் மற்றும் மீன் வலைகளை சரிசெய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில்கொண்டு, கடந்த 15ம் தேதி முதல் ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது.

இதன் காரணமாக காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, படகுகள் பழுது பார்ப்பது, வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மீன்பிடித் தடைக்காலத்திற்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்குமாறு, புதுச்சேரி மாநில அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Exit mobile version