மத்திய அரசின் ஆண்டுக்கு 6 ஆயிரம் வழங்கும் திட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டத்தில் தகுதியுடையவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தமிழகத்தில் நிதி உதவி வழங்குவதற்கான தகுதியுடைய விவசாயிகளிடமிருந்து சிறு, குறு விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, தற்போது 50 விவசாயிகளின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version